வலைப்பதிவு திரட்டியாளர் கைது!!

தமிழ்மணத்தை உருவாக்குகின்ற சமயத்தில் திரு. காசி அவர்கள் தமிழ்மணம் ஒரு வலைப்பதிவுகளின் திரட்டி என்றும் இதில் இடம் பெறுகின்ற வலைப்பதிவுகளின் உள்ளடக்கத்திற்கு தாம் பொறுப்பில்லை என்றும் தெளிவாக கூறிவந்ததுடன் அதற்கான சரியான டிஸ்கியையும் முகப்பு பக்கத்தில் இணைத்தார். அவரது பயத்தை உறுதி செய்யும் முகமாக Blogme.gr என்ற கிரேக்க வலைதிரட்டியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டு அவரது வீட்டில் சோதனைகள் நடத்தி கணினி வந்தட்டும் கைப்பற்றப் பட்டுள்ளது. ஒரு கிரேக்க பிரபலத்தைப் பற்றிய அங்கத வலைப்பதிவை தாங்கி வந்ததிற்காக இந்த கைது நடந்தேறியிருக்கிறது. இதனால் கொந்தளித்துள்ள கிரேக்க வலைப்பதிவாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக நூற்றுக்கணக்கான பதிவுகளை அனைத்து மொழிகளிலும் எழுதி உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறார்கள். இணைய கட்டுப்பாட்டுக் கழகம் (Internet Governance Forum) என்ற அமைப்பின் கீழ் இணைய நல விரும்பிகள் ஏதென்ஸ் நகரில் கூடி இந்த வாரம் வலையுலகில் திறந்த தன்மையையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பது பற்றி விவாதிக்க இருக்கும் சமயத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.

கிரீஸில் இதற்கு முன்னரே வேண்டாதமின்னஞ்சல்(spam) பரப்பியதற்காக ஒரு ஸ்வீட் நிரலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தவிர நான்கு வருடங்கள் முன் மின்னணு விளையாட்டுக்களை தடை செய்தது உலக கவனத்தை ஈர்த்து, பின் அததடையை விலக்கியது.உலக செய்தியாளர் சுதந்திரம் இண்டெக்ஸில் (Worldwide Press Freedom Index) 32ஆவது (168இல்)இடம் வகிக்கிறது. இந்தியா 105ஆவது இடத்தில் இருக்கிறது. வலைப்பதிவர்களுக்கு ஆட்டோ வருவது இருக்கட்டும், வலை திரட்டி பதிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது.

இது பற்றிய slashdot சுட்டி


சோம்நாத் சாட்டர்ஜி - குடியரசுத்தலைவர் ?

தற்போதைய குடியரசுத் தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்களின் பணிக்காலம் ஜூன் 2007 இல் முடிவடைகிறது. இவருக்கு அடுத்த குடியரசுத் தலைவர் பதவிக்கு இப்போதே அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து ஆதரவு தேட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆளும் கூட்டணியின் காங்கிரஸ் தலைமை டாக்டர் கரண்சிங்கின் பெயரையும் பிஜேபி துணை குடியரசுத் தலைவர் திரு.பைரோன்சிங் ஷெகாவத் பெயரையும் முன் வைத்துள்ளன. ஆனால் கு.த தொகுதியில் இருவருக்குமே உறுதியாக வெற்றி வாய்ப்பிற்கான வாக்குகள் எண்ணிக்கை இல்லாததை உணர்ந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளராக மக்களவை சபாநாயகர் திரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் பெயரை அரசியல் கட்சிகளிடம் தூது விட்டுக் கொண்டிருக்கிறது. திரு எச்சூரி இதுபற்றி பிஜேபி தலைவர்களை கலந்தாலோசித்திருப்பதாக தெரிகிறது.திரு. பிரகாஷ் கராட் சமாஜ்வாடி,தெலுகுதேசம்,NCP, RLD கட்சிகளுடனும் அவர் மனைவி பிருந்தா கராட் BSPயின் மாயாவதி, அதிமுக பொதுசெயலாளர் செல்வி ஜெயலலிதா ஆகியோருடன் பேசவிருப்பதாகத் தெரிகிறது.

நாட்டு நடப்பையும் குடியரசு தலைவர் தொகுதியின் எண்ணிக்கைகளையும் கணக்கில் கொண்டால் ஒரு பொதுவுடைமை கட்சி வேட்பாளர் அடுத்த ஜனாதிபதியாக வர நல்ல வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. அடுத்த மத்திய தேர்தலில் மூன்றாம் அணி அமையுமானால் மார்க்ஸிஸ்ட் ஜனாதிபதியின் தயவில் அவர்கள் கூட்டணி ஆட்சிக்கு தலைமையேற்கவும் இயலும். இன்றுபோல் பின்னாலிருந்து ஆட்டி வைக்க வேண்டியதில்லை.

திரு சோம்நாத் சாட்டர்ஜி அவர்கள் பத்து முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டவர். ஜார்கண்ட் தீர்ப்பின்போது உச்சநீதிமன்றத்துடன் முரண்பட்டு குடியரசுதலைவரின் சுட்டுதலுக்கு ( Presidential reference) வேண்டியவர். அவர் பணியாற்றும் சாந்திநிகேதன் ஸ்ரீநிகேதன் வளர்ச்சி ஆணையத்தின் மூலம் ஊதியம் (Office of Profit) பெறுவதாக குற்றம் சாட்டப் பட்டவர். இவரது தந்தை நிர்மல் சாட்டர்ஜி பிஜேபியின் முன்னோடியான அகில் பாரதீய இந்து மகாசபையின் தலைவராக இருந்ததும் குறிப்பிட தகுந்தது.

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!

தீபாவளித் திருநாள்... கதிரவன் எழுமுன்னே படுக்கையிலிருந்து எழும் நாள். நாளும் ஒரு புத்தாடையா எனக் கடியும் தந்தையே அரசின் கடன், கோஆப்டெக்ஸ் தள்ளுபடியில் புத்தாடை அணிவித்து மகிழும் நாள். வருடத்தின் வியர்வை யெல்லாம் தொழிலாளர் போனஸாகப் பெறும் நாள். ஆண்டுமுழுமையும் செய்யும் விற்பனையில் 40 விழுக்காட்டை இருவாரங்களில் காணும் பொருளாதார திருவிழா. சிறுவர்களின் பட்டாசு வெடிப்பில் உற்சாகம் காணும் நாள்.முதல்நாள் முதல் காட்சிக்கு போட்டி போடும் 'மச்சிஸ்'. அம்மா செய்த MTR குலோப்ஜாமுனுடன் அடையாறு ஆனந்தபவன் கோதுமை அல்வா போட்டிபோடும் இனிப்புகளின் ஊர்வல நாள். மாமனாரின் தலையிலும் பட்ஜெட்டிலும் துண்டு போடும் தலை தீபாவளி திண்டாட்டங்கள்.

தீபாவளி என்றால் தீபங்களின் அணிவகுப்பு என்றிருக்க தமிழகத்தில் மட்டும் நாம் தீ கக்கும் பட்டாசுகளின் படையெடுப்பாக கொண்டாடுகிறோம். நரகாசுரனை கண்ணன் வெற்றி கொண்ட அமாவாசைக்கு முந்திய சதுர்தசி தினத்தில் அந்த அசுரனின் மரண தருவாய் ஆசையை நிறைவேற்றுமுகமாக தமிழகத்தில் கொண்டாடுகிறோம். இதை கேரளத்தில் தோல்வியை தழுவிய மகாபலியின் இறுதி ஆசை நிறைவேற்றுமுகமாக ஓணக் காலத்தில் மகாபலிக்கு வரவேற்பு நடத்துவதற்கு இணையாகக் கூறலாம். முக்கியமாக இந்நாளில் எந்த தனி பூசையும் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ளலாம்.

இங்கெல்லாம் இன்றிலிருந்தே தீபாவளி துவங்கி விட்டது. முதல்நாளான இன்று தன் திரஸ் என்று நம்மூர் அட்சய திருதியை போல கொண்டாடுகிறார்கள். தங்கமும் வைரமும் வாங்க கடைகளில் ஒரே கூட்டம். தீபாவளியை அமாவாசை இரவன்று தீபங்களை ஏற்றி இலக்குமி பூசை செய்து கொண்டாடுகிறார்கள். தவிர இராமன் ஜெயராமனாக அயோத்தி திரும்பிய தினமாகக் கொண்டாடுகிறார்கள். கொல்கொத்தாவில் இது காளிபூஜா.சீக்கியர்கள் தங்கள் குரு ஹர்கோபிந்த்ஜி குவாலியர் சிறையிலிருந்து விடுதலை அடைந்த நாளாகக் கொண்டாடுகிறார்கள். விக்கிபீடியாவில் இது பற்றி ஒரு சுவையான கதை கூறப் பட்டுள்ளது.குஜராத்திகளுக்கும் ஜைனர்களுக்கும் இன்று புத்தாண்டு தினம். ஜைனர்கள் மகாவீரரின் மோட்சநாளாகவும் கொண்டாடுகிறார்கள்.

எல்லோருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !! கூடவே நமது நோன்பிருக்கும் நண்பர்களுக்கும் இனிய இரம்ஜான் வாழ்த்துக்கள்!!

சயனைட் - அந்த கடைசிநாட்கள்

இராஜிவ்காந்தி படுகொலையில் குற்றவாளிகளான ஒற்றைக்கண் சிவராசு மற்றும் சுபா பெங்களூரில் கழித்த நாட்களையும் கடைசியில் அவர்களது பரிதாப முடிவினையும் அடிப்படையாகக் கொண்டு சென்னை திரைப்படக்கல்லூரி முன்னாள் மாணவரும் கன்னட இயக்குனருமான திரு AMR ரமேஷ் 'சயனைட்' என்னும் கன்னடப் படத்தை வெளியிட்டிருக்கிறார். இங்கு நடக்கும் ஆசிய திரைப்பட விழாவில் இந்தியப் பகுதியில் இடம் பெற்றுள்ள இந்தப் படம் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. மராத்தி நடிகர் இரவி காலே சிவராசனாகவும், நடிகை மாளவிகா சுபாவாகவும், நடிகை தாரா மிருதுளாவாகவும் கன்னட நடிகர் ரகு இரங்கநாத்தாகவும் அசல் பாத்திரங்களை உருவிலும் நடையிலும் ஒட்டி நடித்திருப்பதாக புகழுரைகள் சொல்கின்றன. பாடல்களே இல்லாத 115 நிமிட படம் மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது.

இங்கு பேட்டியளித்த இயக்குனர் ரமேஷ் இதனை இந்தியில் அமிதாப்பை வைத்து எடுக்க திடமிட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அவர் "The film is not about Rajiv Gandhi, but about Sivarasan and Shubha who are on the run after the assassination to escape the police dragnet. It is an attempt on my part to authentically capture the human drama that ensues in the last 20 days in the lives of the LTTE assassins" என்று சொல்கிறார்.

யாரையும் குறைசொல்லாது, கொலையாளிகளின் கடைசி மன அழுத்தங்களை சித்தரிப்பதாக அவர் கூறுவதை படத்தைப் பார்த்த நமது கர்நாடக பதிவர்கள் சரியா என பதியவேண்டும். குறைந்தது பின்னூட்டத்திலாவது தெரிவிக்கலாம்.

கூகிள் மீது வழக்கு

மும்பை உயர்நீதிமன்றத்தின் ஔரங்காபாத் அமர்வில் கூகிளின் சமூக வலையகமான 'ஆர்குட்' (Orkut) மீது உள்ளூர் வழக்கறிஞர் யுகாந்த் இந்தியா மீது வெறுப்பை பரப்புவதாக ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் மாண்புமிகு ஏ.பி. தேஷ்பாண்டே மற்றும் ஆர்.எம். போர்டே, மகாராஷ்ட்ர அரசை கூகிளுக்கு நோடீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது. இந்திய மூவர்ணக் கொடியை எரிக்கும் படத்துடன் இந்திய எதிர்ப்பு வாசகங்களை கொண்ட "We hate India" சமூககுழு உருவாக்கப் பட்டிருப்பதாக வழக்குமனு கூறுகிறது. அந்த மனுவில் தகவல் நுட்ப சட்டம் -2005ன் கீழ் ஒரு "controller" நியமிக்கப் பட்டு இத்தகைய குழுக்களை கண்காணிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.
நன்றி:DNA News
மேலதிக தகவல்களுக்கு பார்க்க: ஆங்கிலப்பதிவு 1, ஆங்கிலப்பதிவு 2

TOTFL Test!!

நீங்கள் TOEFL கேள்விப் பட்டிருப்பீர்கள். TOTFL ....ஆம், தமிழை பிறமொழியாக கொண்டவர்களுக்கு தேர்வு. சென்னையில் குப்பை கொட்ட இந்த தேர்வில் வெற்றி பெறுவது அவசியம்.

TOTFL எடுக்க நான் ரெடி, நீங்க ரெடியா ?
தமிழ் பிறமொழியாக கொண்டவர்களுக்கானதால் ஆங்கிலத்தில்:
(ஒண்ணுமில்லேங்கோ, வந்த மின்னஞ்சலை தமிழாக்கம் செய்ய நேரமில்லாமல் அப்படியே கட் & பேஸ்ட்)

Questions:

1) What do you do with a Gujili?

a) Gujaals
b) Gilma
c) Gilpans
d) Galij

2) What is a Jujubi ?

a) Something sweet
b) An easy one
c) A tough one
d) An Alwaa

3) What is Alwaa?

a) Something you find in Tirunelveli
b) What a girlfriend gives when she marries someone else
c) A laddu
d) Jujubi

4) What is the respectful way to address a friend?

a) Machi
b) Sir
c) By name
d) Aiya

5) Who is a 'Frooti' ?

a) A studious person
b) A sportsman
c) The professor
d) A soft drink

6) When someone says 'nambitten', what do they mean?

a) I don't believe you!
b) Sure, I believe you
c) Are you nuts??
d) I have to catch a bus

7) Who or what is Peter?

a) A tourist
b) Someone who talks only in English
c) Peter Jones
d) Your teacher

8) For which of the following ! events will you say 'Gumbaloda Govinda'?

a) When you go to Tirupati as a group
b) When the entire gang has been caught watching 'matter'-padam
c) When you do group studies
d) Meeting a Hindi actor

9) What is a 'rupture'?
a) Kadi
b) Draabai
c) Trouble
d) Danger

10) When Someone refering to a woman as 'Seriyana Kattai' ?

a) she is genius
b) she is lean
c) she had looted all guys eyes...
d) she wears wooden chappals.

Check out the answers ...
Correct Answers:

1 - a, 2 - b, 3 - b, 4 - a, 5 - a, 6 - a, 7 - b, 8 - b, 9 - c, 10 - c

If you have scored more than 7 marks, Kalakitta maams...

Refer the following Dictionary of Madras Tamilu to pass in this TOTFL
Exam...

Allwa - To cheat
Aatha - Mother
Abase - Loot adiththal
Alppam - A silly/cheap dude
Anna - The elder brother
Anni - Anna's figure
Appeettu - Unsuccessful
Asaththal - Kalakkal
Bajari - A not-so-friendly figure
Bandha - Pillim
Bekku - Fool
Body - Muscular Machi
Chithee - Aunty Figure
Dapsa/Doop - Lie
Desi Gujili - An Indian figure in US
Dhil - Courage
Dhool - Super
Dham - To smoke
Daavu - Site seeing
Dickielona - A friendly game played in Delhi(courtesy Movie : Gentleman)
Damaram - Deaf
Dori - Squint-eyed Figure item - Young/Attractive Lady/Women/Girl
Freeyaavidu - Forget it
Gaali - Appeettu
Gujili - Figure
Guru - Head of the gang
Gujaals - Having fun with Gujilis
Gaanapaattu - Rap song sung by Machis
Galeej - Dirty
Gilli, Goli - Traditional games played in Madras
Goltti - A dude f! rom Andhra
Jakku - An exclamation on seeing a not-so-Takkar figure (see Jil below)
Jollu - Bird watching
Jilpaans - Gujaals
Jute - Escape when caught up by girlfriend's father.
Jujubi - Easy
Jil - An exclamation on seeing a Takkar figure
Jalsa - Same as Gujaals
Kaattaan - Uncivilized/ Rude Machi
Kenai - Idiot
Kikku / Mabbu - Intoxicated/under influence
Kalakkalls - To cause a flutter
Kanai pakri - Friend of ushar pakri
Kindal - To make Fun
Kaka adikarathu - Putting soaps to someone
K M L - Kedacha Mattum Labam
Kutti - Figure
Kudumba figure - Homeloving Gujli
Kudumba paatu - A song with which machis identify themselves
Kulls - A short machi
Laddu - Allva
Loot adiththal - to steal
Maams - One cool dude
Maanga - Fool
Machi - Maams
Mandai - A sharp guy
Mary - feminine of Peter
Mavu - refer O B.
Nachunu - Bull's eye
Nambitten - I don't believe you
Naattu Katt! ai - A well-built village figure
Naattan - Villager
Naamam - To cheat
Naina - Father (courtesy Telugu)
Kadalai - Machi talking to a Gujili or vice versa
OB- To waste time
Ottal - To make fun of some one
Ondrai anna - Worthless
Pattaani - Machi talking to Machi or Gujli talking to Gujli
Peter Party - Machi trying to show off by talking in hi-fi english
Pathni - A figure who goes around the block
Pakkri - A shrewd dude
Petta - Area
Pisaaththu - Cheap
Pillim - Show-off
Peela - To lie
Rambo - A manly figure
Sister - Often used by Machis while Approching Figures for the first
time
Songi - Lazy
Saanthu pottu - Possibility of getting beaten by a stick (courtesy
Movie :
Thevar Magan)
Takkar figure - Semma figure
Thanni - Liquor
Thalaivar - Leader
Tin katrathu - Getting into trouble (courtesy Movie: Anjali

நான் மிகவும் சிரித்தேன், நீங்கள்.. பின்னூட்டமிடவும்.

சசியை தோற்கடித்த சந்திரன்!


ஐக்கிய நாடுகள் சபையின் பிரதம செயலர் பதிவிக்கான போட்டியிலிருந்து திரு சசி தரூர் விலகிக் கொண்டிருக்கிறார். இது பற்றிய எனது முந்தைய பதிவு. அப்போதே அவரது வெற்றி பற்றி ஐயம் இருந்தது. இன்று அவை துரதிருஷ்டவசமாக உண்மையாயின.

சசி தரூரின் போட்டி விலகலுக்கான பேச்சு :

மூன்று முன்வாக்கெடுப்புகளிலும் முண்ணனியில் இருக்கும் தென்கொரியாவின் பன் கி மூன் (Ban Ki Moon) அக்.9 அன்று formalஆக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.இப்போது கூட புதிய முகம் ஒன்று போட்டியிட தேர்தல்விதிகள் வாய்ப்பளிக்கின்றன. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பினர்களில் 14 பேர் ஆதரவும் ஒருவர் வாக்களிக்காமலும் பன் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார். நமது தரூருக்கு 10 பேராதரவு கிடைத்து ஒரு வெடொஎதிர்ப்பு உட்பட மூவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போட்டியில் தரூரைத் தவிர தாய் துணை பிரதம மந்திரி, ஜோர்டானின் ஐநா தூதுவர், லாட்வியாவின் அதிபர்,ஆப்கனின் முன்னாள் நிதி அமைச்சர் ஆகியோரும் தோல்வி கண்டனர்.

திங்களன்று எட்டாவது ஐ.நா பொதுசெயலராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள திரு.பன் விவசாயக் குடும்பத்தில் 1944இல் பிறந்தவர்.பன்னாட்டு உறவுகளில் பல்கலைக் கழகத்தில் முதன்மை மாணவராக திகழ்ந்தவர், தென் கொரியாவின் வெளியுறவுத் துறையின் பல பொறுப்புகளை வகித்தவர். தென்கொரியாவின் ஐநா தூதுவராக 2001இல் இருந்தவர். ஆங்கிலம் தவிர பிரென்ச், ஜெர்மன் மற்றும் ஜபானிய மொழிகளில் பரிச்சயம் கொண்டவர்.

இலண்டன் டைம்ஸ் பத்திரிகை அவர் பதவி பெற தென்கொரியா ஏராளமான பண உதவிகளை ஆப்பிரிக்க ஏழைநாடுகளுக்கு உறுதி அளித்து 'தூண்டுவதா'க கூறியுள்ளது. அமெரிக்கா தனது 'வெடொ' அதிகாரத்தினால் ஜனநாயகத்தைக் கொலை செய்வதை விட இது உலகிற்கு நன்மையானதே. தான்ஜானிய மக்களின் பசிப்பிணி நீங்கினால் அவர் பதவி ஏற்பதற்கு முன்பே ஐநாவின் பணி துவங்கி விட்டதாகத் தானே பொருள் ;) இத்தகைய செயல்களால் இனி கோஃபி அன்னன் தான் எழைநாட்டிலிருந்து பணியாற்றிய கடைசி ஐநா பொது செயலராக இருப்பார் எனத் தோன்றுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இத்தோல்வி நமது வெளியுறவு கொள்கைகளுக்கு கிடைத்த ஒரு ஏமாற்றமே. அணிசேரா நாடுகளின் தலைமையாக இருந்து பல நாடுகளின் உற்றநண்பனாக இருந்த நிலையை நழுவ விட்டு 'அரசனை' நம்பி புருசனை கைவிட்டோமோ என சிந்திக்க வேண்டிய சமயமிது.