உமருக்கு அஞ்சலி

'யூனிகோட்' உமர்தம்பி மரணமடைந்தார்கள்.

நமது தமிழ்மணம் Google groupஇல் திரு.நா. கணேசன், ஹூஸ்டன்,டெக்ஸாஸ் அனுப்பியுள்ள மடலை இங்கு அனைவருக்காகவும் பதிகிறேன்:

அதிரை பெற்றெடுத்த அருந்தவப் புதல்வர்களில் ஒருவரும், தமிழ் கணினியுலகில் யூனிகோட் எனும் தானியங்கி எழுத்துரு (Font) மேம்பாட்டிலும் இன்னும் பல கணினி சாதனைகள் படைத்தவரும், கல்வியாளருமான உமர் தம்பி அவர்கள் இன்று மாலை 5:30 மணியளவில்
மரணமடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

உமர் தம்பி அவர்களின் சாதனைகள் தமிழிணையப் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், நுணுக்கமான யுக்திகளைக் கொண்டதாகவும் உள்ளன.

வலைப்பூக்கள் என்று அறியப்படும் Blogs இல் தமிழில் எழுதப்படும் பதிவுகள் உமர்தம்பி அவர்களின் இணைய மென்பொருள் உதவியுடன் மிகச்சிறப்பாக அனைத்து வகை கணினியிலும் தெரியும் வண்ணம் வடிவமைக்கப்பட்டதாகும்.

உலகத் தமிழர்களின் வலைப்பூக்களை திரட்டும் தமிழ்மணம்.காம், (www.thamizmanam.com) உமர் தம்பி அவர்களின் செயலியைப் பயன்படுத்தும் முன்னணி தளமாகும்.

இவற்றுடன் தமிழ் இணைய அகராதி, யூனிகோட் உருமாற்றி, தமிழ் ஈமெயிலர், தேனிவகை எழுத்துறுக்கள் ஆகியவை உமர் தம்பி அவர்களின் இலாப நோக்கற்ற தனிப்பட்ட படைப்புகளாகும்.

மேலும் நமது இணைய தளத்திலும் பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.
இவை மட்டுமின்றி தமிழாயாஹூ குரூப், மரத்தடி டாட் காம், ஈ சங்கமம் ஆகிய தமிழர்
குழுமங்களிலும் இணைய தளங்களிலும் பல பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.

உமர் தம்பி அவர்களின் இணைய மென்பொருட்களை கீழ்கண்ட சுட்டிகளில் காணலாம்.

http://www.geocities.com/csd_one/UniConMagz.zip
http://www24.brinkster.com/umarthambi/tamil/ETamil_search.asp
http://www.geocities.com/csd_one/fonts/

உமர் தம்பி அவர்களின் இழப்பு அதிரைக்கு மட்டுமின்றி தமிழர்களுக்கும் ஏற்பட்ட
பேரிழப்பு என்றால் மிகையில்லை.

அல்லாஹ் அன்னாரின் நற்கருமங்களைப் பொருந்திக் கொண்டு, உயரிய சுவர்க்கவாழ்வை
வழங்குவானாக. ஆமீன்.

இணையத்தமிழ் வளர்ச்சிக்கு அவர் ஆற்றியுள்ள அரும்பணிக்கு தமிழ்மண பதிவர்கள் அனைவரும் கடன்பட்டுள்ளோம். இளம்வயதில் நிகழ்ந்த அவரின் மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பாகும். அன்னாரின் குடும்பத்தினரின் துயரத்தில் பங்குகொண்டு நாமும் அஞ்சலி செலுத்துகிறோம்.

3 மறுமொழிகள்:

குமரன் (Kumaran) கூறுகிறார்

உமர் அவர்களுக்கு அடியேனின் அஞ்சலி.

-அவரின் தன்னலமற்ற சேவையின் பயனை தினந்தோறும் பருகுபவன்.

Sivabalan கூறுகிறார்

மறைந்த திரு. உமர் அவர்களின் குடும்பத்திற்க்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மு.கார்த்திகேயன் கூறுகிறார்

உமர் அவர்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி