புதுதில்லியில் ஒரு புதுக்கோவில்




நவ இந்தியா வின் புதிய அதிசயமாக, இந்திய கட்டிடக் கலையின் சிறந்த சின்னமாக கடந்த வாரத்தில் உலக சமாதானத்திற்கான அக்ஷர்தாம் கோவில் (Akshardham Temple Monument to World Peace ) புதுதில்லியில் திறக்கப்பட்டது. வட இந்தியாவின் ராஜஸ்தானி,குஜராத்தி, ஒரியா,முகலாய மற்றும் ஜெயின் கட்டிடக் கலை நுட்பங்களின் கலவையாக விளங்குகிறது. முழுவதும் பளிங்கினாலும் சிவப்பு பாறை( red sandstone)களாலும் இரும்புக்கம்பிகளை துளியும் உபயோகிக்காமல் இதனை கட்டி முடிக்க 5 வருடங்கள் ஆகியுள்ளன. 234 சித்திர தூண்களும் 9 அலங்கார விதானங்களும், 20 நான்முக சிகார் களும் 20,000 சிலைகளும் கொண்ட இதனை கட்டிட 11,000 சுயஉதவியாளர்கள் (volunteers),சாதுக்கள் மற்றும் கலைஞர்கள் துணை புரிந்துள்ளனர்.
மேல் விவரங்களுக்கு:
http://www.akshardham.com/index.htm

0 மறுமொழிகள்: