Showing posts with label சட்டம்நீதி. Show all posts
Showing posts with label சட்டம்நீதி. Show all posts

மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: மறுபாதி நீதி எங்கே ?

நம் குழந்தைகள் சண்டையிட்டுக் கொண்டாலே நாம் கண்டிக்கும் போது இருவரையும் சேர்ந்து கடிந்துகொள்வதோ தண்டனை வழங்குவதோ செய்வோம். மும்பையின் 1992 திசம்பர்/ 2003 ஜனவரி இனக் கலவரங்கள் குஜராத்தின் 2002 இனக்கலவரங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல. பாபர் மசூதியை 'வெற்றி' கொண்ட மதர்ப்பில் இந்துத்வா மற்றும் மராட்டிய தலைவர்களுடன் உயர்பதவியிலிருந்த காவல் அதிகாரிகளும் இணைந்து நிகழ்த்திய இனப் படுகொலைகள் பின்னால் வந்த குண்டுவெடிப்பு சம்பவங்களால் மறந்து போயின. இந்த குண்டுவெடிப்பிற்கு பின்னால் இருந்த தீவிரவாதிகள் மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை. நீதியரசர் கோடே அவர்கள் மிகப் பொறுமையாக அனைத்து ஆவணங்களையும் சாட்சிகளையும் ஆராய்ந்து மிகச் சரியான தண்டனை வழங்கியிருக்கிறார். குண்டு வெடிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தது. தாமதமான நீதி விசாரணையால் சில குற்றமற்றவர்களும் 13 வருட சிறைதண்டனை அனுபவித்திருந்தாலும் சட்டத்தின் மேன்மை நிலைபெற்றது.

அதேபோல் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுகும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது சரியான அரசியல் செய்கையாகும். ஓய்வுபெற்ற நீதியரசர் கிருஷ்ணா அவர்கள் மிகத் திறமையாக பரிசீலித்து இனக்கலவரங்களின் பின்னணியில் இருந்த பெருந்தலைகளை அடையாளம் காட்டியுள்ளார். அந்த ஆணைய அறிக்கை வழி எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்தக் கலவரங்களில் கொடூர கொலைகள் செய்த காவல்துறையினர் பதவிஉயர்வு பெற்று வளைய வருவது நீதி பரிபாலனத்திற்கு பெரும் இழுக்காகும். அராஜகக் கும்பல்களுக்கு தலைமையேற்றவர்கள் அரசியல் தலைவர்களாக வலம் வருவதும் வெட்கக் கேடு. காரணமாக இருந்தவர்களையும் காரியமாற்றியவர்களையும் சரியாக தண்டிக்காமல் போனால் சட்டத்தின்படி அரசோச்சும் நாடு என்பது ஏட்டளவிலேயே இருக்கும்.

நீதியின் மறுபக்கமும் வழங்கப் படுமா ?மும்பையின் களங்கம் நீக்கப் படுமா?

நீதிதேவதையின் கண்கள் மட்டுமே கட்டப்பட்டிருக்கிறதா?

While she goes by many names, the most popular are Lady Justice, Scales of Justice, and Blind Justice. The statue dates it origins from ancient Roman times as the lady represented is Themis, the goddess of justice and law. Well known for her clear sightedness, she typically holds a sword in one hand and scales in the other. The scales that she holds represent the impartiality with which justice is served and the sword signifies the power that is held by those making the decision. During the 16th century, artists started showing the lady blindfolded to show that justice is not subject to influence. From this, the statue earned the name Blind Justice.
தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று கண்ட ஒரு ஒற்றுநிகழ்வு மிகவும் கலக்கத்தை உண்டுபண்ணுவதாக உள்ளது. தில்லியின் கார்மோதல் வழக்கு பற்றியதைத்தான் குறிப்பிடுகிறேன். இத்தைகைய ஒற்று நிகழ்ச்சிகளின் தார்மீக, சட்டரீதியான சரி தவறுகளை விவாதிக்க வரவில்லை. அடிப்படையில் சட்டம் நீதி ஒழுங்காக நீதிமன்றங்களில் வழங்கப் படுகிறதா என்ற அடிப்படை நம்பிக்கையையே தகர்ப்பதாக அந்நிகழ்ச்சியில் கண்டவை அமைந்தன.

1999ஆம் வருடம் தில்லியில் முன்னாள் கடற்படைத் தலைவர் நந்தா அவர்களின் மகன் தன் விலையுயர்ந்த BMW காரை மோதி சாகடித்த வழக்கில் அரசுத்துறை வழக்கறிஞரும் குற்றம் சாட்டப்பட்டவரின் வழக்கறிஞரும் சேர்ந்து கொண்டு சாட்சியை விலைக்கு வாங்கி குற்றவியல் நீதியையே கேலிக்குறியதாக்கிவிட்டதாக அந்த தொலைக்காட்சி காண்பித்தது. அந்த ஒற்று நிகழ்ச்சி உண்மையானதா பொய்யாக சோடிக்கப்பட்டதா என கூறமுடியாவிடினும் அந்த தொலைக்காட்சியின் பிரபலத்தை வைத்து அவ்வாறு அவர்கள் செய்யமாட்டார்கள் என்றே நம்ப வேண்டியிருக்கிறது. வழக்கறிஞர்கள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி வழக்குகளை திசைதிருப்புவார்கள் என்ற பேச்சையும் மீறி அவர்கள் ஊழல்வரை செல்லமாட்டார்கள் என்ற நம்பிக்கையை பொய்ப்பித்தார்கள் இவர்கள்.

இதற்கும் மேலாக காட்சியில் பங்கேற்ற மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் மத்திய அமைச்சருமான கபில் சிபல் தன் கருத்தைக் கூறும்போது இது எப்போதும் நடப்பதுதானே, யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பது போல் சொன்னது நம் நீதித்துறை எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று எண்ண வைக்கிறது. திரைப்படங்களில் காணும் ஊழலும் இருதரப்பு வக்கீல்களின் கூட்டும் கற்பனைக்காக என்றிருந்தது பொய், நிழல் நிஜமாகிறது என்ற உணர்வு மனதில் வலியைத் தந்தது. பணமும் பதவிக்கும் எதிரே சாமான்யனின் வழக்கு செல்லுபடியாகாது என்பது எத்தனை துரதிருஷ்டமானது ? ஜனநாயகத்தினை பொய்யாக்குவது ?

பெருமையும் கௌரவமும் வாய்ந்த இந்த தொழிலின் பால் மக்களுக்கிருந்த நம்பிக்கையை, ஆக்ராவில் நடந்த வழக்கறிஞர்களின் செயல்பாடுகளும் இந்த நிகழ்ச்சிகளும் குலைத்துவருகிறது. பார் கௌன்சிலும் அவர்களது மற்ற கழகங்களும் தாங்களே தங்கள் நன்னடத்தையை மேம்படுத்தும் வழி காணவேண்டும்.